ஊட்டி, டிச.12: விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் பங்களிப்பு அவசியம் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி உள்ள தனியார் பள்ளியில் நடந்த விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். தொடர்ந்து, அவர் பேசியதாவது: உலகின் முதல் விஞ்ஞானி விவசாயி. ஆனால், அறிவியல் வளர்ச்சியையும். விவசாய வளர்ச்சியையும் ஒன்றிணைக்க வேண்டும். பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே விவசாயம் குறித்த மாற்றத்தை உருவாக்க முடியும். அழுத்தம் தரும் போதும், வாய்ப்பு தரும்போதும்தான் நாம் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும். 30 ஆண்டுக்கு முன்னர் சிறிய கூரை கட்டிடத்தில் இருந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தனது பிஎஸ்எல்வி 50வது செயற்கைகோளை செலுத்தும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்கா உட்பட பிற நாட்டுகளின் செயற்கை கோள்களை சுமந்து செல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளது. நிலவில் நீர் இருப்பதை சந்திராயன்தான் கண்டுபிடித்தது. இன்று 10 செயற்கை கோள்களை வெற்றிகரமாக நாம் விண்ணில் செலுத்தியுள்ளோம் என்றார்.