ஊட்டி, டிச.12: புகழ்பெற்ற நீலகிரி மலைகளின் சிறப்புகள் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான மலைகள் உள்ளன. 2637 மீட்டா் உயரமுள்ள தொட்டபெட்டா மலைச்சிகரம், கொலரிபெட்டா மலை, முக்குருத்தி மலை, நீலகிரி மலை, ரங்கசாமி பீக், நீடில்ராக் போன்றவை குறிப்பிட்டு சொல்ல கூடிய மலைகளாக விளங்கி வருகிறது. நீலகிரியில் உள்ள மலைதொடா–்களுக்கு நடுவே பவானி, குந்தா மற்றும் மாயாா் ஆகிய ஆறுகள் உற்பத்தியாகின்றன. இங்கு உற்பத்தியாகும் ஆறுகளுக்கு நடுவே அணைகள் கட்டி நீர் மின் உற்பத்தி செய்வதன் மூலம் 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. நீலகிரியின் பிரதான தொழிலாக தேயிலை விளங்கி வருகிறது. மேலும் கடந்த 200 ஆண்டுகளாக மலை காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன. நீலகிரிக்கு ஆண்டுக்கு சுமாா் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சமீபகாலமாக அதிகரித்து வரக்கூடிய கட்டுமானங்கள் நீலகிரியில் உள்ள மலைகளின் அழகிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. பல்வேறு மலைத்தொடர்களை தன்னகத்தே கொண்டு, மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஒன்றாக அமைந்து பரந்து விரிந்து மலைகளின் அரசியாக திகழும் நீலகிாியில் உலக மலைகள் தினத்தையொட்டி மலைகளை பாதுகாக்கும் பொருட்டும், அவற்றின் சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் உாிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.