நாகர்கோவில், டிச.12: கன்னியாகுமரி மாவட்ட நகை தொழிலாளர் பாதுகாப்பு பேரவை தலைவர் செலஸ்டின், உப தலைவர் நாகலிங்கம், பொதுசெயலாளர் மீனாட்சிசுந்தரம், முதன்மை செயலர் ரகுபதி, பரமசிவன், அந்தோணி உள்ளிட்டோர் குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டத்தில் நகை தொழில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. சிறு வணிகம் முதல் பெரிய வணிகம் வரை தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதோடு பாரம்பரிய நகை தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலையின்றி பிற தொழிலுக்கு போகும் நிலை ஏற்பட்டுள்ளது. நகை தொழிலை நம்பியுள்ள நகை கடைகள் மொத்த பட்டறைகளில் 30 சதவீதம் கூட செயல்படவில்லை.