தேனி, டிச.11: தேனியில் நடந்து வரும் மின்வாரியத்தில் காலியாக உள்ள களப்பணியாளர்கள் பணியிடத்தை நிரப்ப பயிற்சியாளர்கள் தேர்வு இன்றும் நாளையும் நடக்கிறது.தமிழ்நாடு முழுவதும் மின்வாரியத் துறையில் காலியாக உள்ள சுமார் 5 ஆயிரம் களப்பணியாளர்கள் பணியிடத்தை நிரப்ப மின்வாரியத் துறை முடிவு செய்தது. இத்தகைய கேங்க் மேன் எனப்படும் களப்பணியாளர் பயிற்சியில் சேர்ந்து 2 ஆண்டுகளுக்கு மேலாக பயிற்சி பெற்றவர்கள் நிரந்தர களப்பணியாளர்களாக நியமிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.தேனியில் என்.ஆர்.டி ரோட்டில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் தேனி மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் உமாதேவி தலைமையில் தேர்வுக்குழுவினரான வேறு மாவட்டங்களை சேர்ந்த மின்வாரிய 1 செயற்பொறியாளர், 10 உதவி செயற்பொறியாளர்கள், 10 உதவி பொறியாளர்கள் கொண்ட குழுவினர் தேர்வு செய்து வருகின்றனர்.