சிவகங்கை, டிச. 11: இயற்கை முறையில் வயல்களில் மண் அரிப்பை தடுக்க என்ன வழிமுறைகள் உள்ளன என்பது குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 5ம் தேதி உலக மண் வள தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த மண்வள தினத்தின் கருபொருள் மண் அரிப்பை நிறுத்துங்கள், நமது எதிர்காலத்தை காப்பாற்றுங்கள் என்பதாகும். ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் மனித நல்வாழ்வை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.