சேலம், டிச.11: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சேலம் தொங்கும் பூங்காவில் கட்டப்பட்டு வரும் 10.50 கோடி மதிப்பிலான சமுதாய கூடம், வரும் மார்ச் மாதம் திறக்கப்படுகிறது. சேலம் மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, தொங்கும் பூங்கா வளாகத்தில் 10.50 கோடி மதிப்பில், பல்நோக்கு சமுதாய கூடம் கட்டப்பட்டு வருகிறது. மாநகராட்சி கமிஷனர் சதீஷ், நேற்று அப்பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பணி விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து கமிஷனர் சதீஷ் கூறுகையில், ‘‘சேலம் மாநகர மக்களுக்காக பிரம்மாண்டமான முறையில் சமுதாய கூடம் கட்டப்பட்டு வருகிறது.