நாகர்கோவில், டிச.11: திருவட்டார் மற்றும் கிள்ளியூர் தாலுகா பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வந்த மூன்று செங்கல் சூளைகளை மூடுவதற்கு பத்மநாபபுரம் சப் கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர் பகுதிகள், குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. ஆற்றின் கரைகளில் இருந்தும், குளங்களில் இருந்தும், பட்டா நிலங்களில் இருந்தும் மண் எடுக்கப்பட்டு செங்கல் சூளைகள் செயல்படுகின்றன. குழித்துறை ஆற்றின் கரையோர பகுதிகளில் சட்ட விரோதமாக இயங்கும் செங்கல் சூளைகளை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.