ராஜபாளையம், டிச. 10: ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் அளவுக்கதிகமாக குப்பை தொட்டிகளை வைத்துள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. ராஜபாளையம் நகராட்சி சார்பில், நகராட்சிக்குட்பட்ட பல இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் அதிகம் குப்பைகளை சேகரிப்பதால் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனை அகற்ற நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்வதில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும், போக்குவரத்து இடையூறாகவும் குப்பைத் தொட்டிகளை வைத்து வருகின்றனர். விழாக்காலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் விசேஷ காலங்களில் அதிகளவு குப்பைகள் சேர்வதால், ஆங்காங்கே சாலைகளில் கொட்டி அசுத்தப்படுத்தி வருகின்றனர்.