கழுகுமலை, டிச. 10: கழுகுமலையில் பராமரிப்பின்றியும், தொடர் மழையாலும் புதர் மண்டிய சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர். தென் தமிழகத்தின் எல்லோரா என்றழைக்கப்படும் கழுகுமலை, சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு, மலை மீதுள்ள சமணர் சிற்பங்கள், வெட்டுவான் கோயிலை காண வெளி மாவட்டங்கள் மட்டுமன்றி வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகை தருகின்றனர். இங்கு சிறுவர்கள் நலன்கருதி அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவில் இடம்பெற்ற ஊஞ்சல், சறுக்கு, ராட்டினம் உள்ளிட்டவற்றை சிறுவர்கள் பெரிதும் பொழுதைப் போக்கி வந்தனர். ஆனால், கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழையால் ெபருக்கெடுத்த தண்ணீர் குளம் போல் பூங்காவில் நின்றது.