திருவில்லிபுத்தூர், டிச. 5: திருவில்லிபுத்தூர் பகுதியில் தொடர்மழையால், பாதிக்கப்பட்ட வெங்காய சாகுபடியை எம்.எல்.ஏ எம்.எல்.ஏ ஆய்வு
செய்தனர். திருவில்லிபுத்தூர் பகுதியில் பிள்ளையார் நத்தம், மேலத்தொட்டியபட்டி பூவாணி ஆகிய பகுதியில் வெங்காய சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் வெங்காயத்தை, தென்மாவட்டங்களில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு அனுப்பப்படும். இந்நிலையில், திருவில்லிப்புத்தூர் பகுதியில் தொடர் மழை காரணமாக பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த வெங்காயங்கள் அழுகி பாதிப்படைந்துள்ளது. இதனால், ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் வரை செலவு செய்த, விவசாயிகள் கவலையில் உள்ளனர்.