விருதுநகர், டிச. 3: விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சியில் உள்ள என்.டி.முருகன் நகரில் போதிய வாறுகாலின்றி மர்மக்காய்ச்சல் பரவுவதாக பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சியிள்ள உள்ள என்.டி.முருகன் நகர் மற்றும் ஆர்.வி.ஆர் நகர் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ரோசல்பட்டி ஊராட்சியில் உள்ள என்.டி.முருகன் நகர் மற்றும் ஆர்.வி.ஆர்.நகரில் 200க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இந்த பகுதிகளில் போதிய கழிவுநீர் வாறுகால், குடிநீர் வசதியில்லை. தெருவிளக்கு, ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.