மஞ்சூர், டிச.1: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. இப்பகுதியில் நீர் மின் நிலையம் மற்றும் மின் வாரிய ஊழியர் மற்றும் தனியார் குடியிருப்புகள் அமைந்து உள்ளது. இந்நிலையில், கெத்தை பகுதியில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த யானைகள் அப்பகுதியை சுற்றிலும் விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதுடன் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மின் வாரிய குடியிருப்பில் உலா வந்த 4 காட்டு யானைகள் சாலையோரத்தில் இருந்த ராமப்பன் என்பவரது மளிகைக்கடையின் கதவை உடைத்தது. தொடர்ந்து கூட்டத்தில் இருந்த யானை ஒன்று கடைக்குள் புகுந்து அங்கிருந்த அலமாரிகளை கீழே தள்ளி கடையில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பெரும்பாலான மளிகை பொருட்களை சூறையாடியது.