ஈரோடு, நவ.29:உள்ளாட்தி தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று நேர்க்காணல் துவங்குகிறது. இதுகுறித்து ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஈரோடு தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் செய்தவர்களுக்கு ஈரோடு மணல்மேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது.அதன்படி, இன்று (29ம் தேதி) காலை 9 மணிக்கு மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கும், 12 மணிக்கு சென்னிமலை வடக்கு ஒன்றியத்திற்கும், மாலை 3 மணிக்கு கொடுமுடி ஒன்றியத்திற்கும், 30ம் தேதி காலை 9 மணிக்கு ஈரோடு ஒன்றியத்திற்கும், காலை 10.30 மணிக்கு ஊத்துக்குளி ஒன்றியத்திற்கும், 12 மணிக்கு குன்னத்தூர் ஒன்றியத்திற்கும், மாலை 3 மணிக்கு பெருந்துறை ஒன்றியத்திற்கும் நேர்க்காணல் நடக்கிறது.