இதுகுறித்து நாம்தமிழர் கட்சி குமரி மண்டல வழக்கறிஞரணி இணைச்செயலாளர் ஜாண்சிலின் சேவியர் ராஜ் கூறுகையில், தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 5590, டாஸ்மாக்கடைகளின் எண்ணிக்கை 6823 அந்த அளவிற்கு கல்வி வளர்ச்சியைவிட டாஸ்மாக் கடைகள் மூலம் மதுவியாபாரத்திற்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களுக்கு அருகில் டாஸ்மாக்கடைகள் திறக்ககூடாது என்று சட்டம் கூறுகிறது. அதை கண்டுகொள்ளாமல் ஆளும்கட்சியினர் பார் வசதியுடன் வீதிக்கு வீதி கடைகளை திறந்துவிடுகின்றனர். பொதுமக்கள் போராட்டம் நடத்தினால் தடியடி, வழக்குபதிவு என போராட்டங்களை நசுக்குகின்றனர். நீதிமன்றம் சென்று முறையிட்டால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் கடைதிறக்கமாட்டோம் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்துவிட்டு சில மாதங்களுக்கு பின்னர் அதேபகுதியில் கடைகளை திறந்து நீதிமன்றத்தை கொச்சைபடுத்துகின்றனர்.