58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க கோரும் விருவீடு மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு தீர்மானம்

வத்தலக்குண்டு, நவ. 27: வைகை அணையிலிருந்து 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க கோரும் விருவீடு மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதென தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வத்தலக்குண்டுவில் தமிழக விவசாயிகம் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன் தலைமை வகிக்க, சட்ட ஆலோசகர் பழனிக்குமார், மாநில பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விருவீடு பகுதி மக்கள் குடிக்கவும், விவசாயத்திற்கும் தண்ணீரின்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வைகை அணையிலிருந்து 58ம் பாசன கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விட கோரி கடந்த வாரம் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

எனினும் இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே விருவீடு விவசாயிகள், பொதுமக்கள் தண்ணீர் திறக்க கோரி அடுத்து நடத்தும் போராட்டத்தில் அவர்களோடு இணைந்து போராடுவோம் என்றும், தங்களது ஆதரவை நேரில் சென்று தெரிவிப்பது என்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் பொன்னம்பலம், பொன்னுச்சாமி, செல்வக்குமார், மொக்கராசு, போஸ், ரமேஷ், தர்மலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில இளைஞரணி செயலாளர் தங்கப்பாண்டி நன்றி கூறினார்,

Related Stories: