பாடாலூர், நவ 27: பாடாலூரில் வாலிபரை தாக்கிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலத்தூர் தாலுகா பாடாலூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் கலியபெருமாள் (23). இவர் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் வேல்முருகன், மாரிமுத்து மகன் கிருபானந்தன், மணிகண்டன் ஆகியோர் மற்றொரு பைக்கில் வந்து கலியபெருமாள் ஓட்டி சென்ற பைக் மீது மோதுவது போல் சென்றனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வேல்முருகன், கிருபானந்தன், மணிகண்டன், அவர்களது நண்பர்கள் முத்துக்குமார், பிரசாந்த் உள்ளிட்ட 8 பேர் சேர்ந்து கலியபெருமாளை தாக்கினர்.