செங்கம், நவ.27: செங்கம் அருகே அரசின் அலட்சியத்தால் மலைவாழ் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பரிதாப நிலை தள்ளப்பட்டுள்ளனர். அதனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை அடிவார கிராமங்களான பன்ரேவ், ஊர் கவுண்டனூர், துரிஞ்சிகுப்பம், கல்லாத்தூர், கல்பிளந்தானூர் போன்ற மலை அடிவார கிராமங்களில் மலை சாதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில், மலைவாழ் மக்கள் முற்றிலும் விவசாயம் சார்ந்து எழுத்தறிவு, படிப்பறிவு என்று எந்த விழிப்புணர்வு இன்றி வாழ்ந்து வருகின்றனர். மேலும், தங்களின் பிள்ளைகளுக்கு அரசின் சலுகைகளான உயர் கல்வி, அரசு பணிகள், வங்கியில் கடனுதவி, சாதி சான்று போன்ற அரசு திட்டங்கள் பெறமுடியாமல் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.தொடர்ந்து, போதிய மழை இல்லாத நேரங்களில் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு குடும்பத்துடன் சென்று கூலி வேலை செய்கின்றனர். கடந்த 2002ம் ஆண்டு கிளையூர், கல்லாத்தூர், துரிஞ்சிகுப்பம் உட்பட பல பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் ஆயிர கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் குறைந்த விலைக்கு குப்பநத்தம் அணைக்கு கையகபடுத்தப்பட்டு பல தவணைகளாக அவர்களுக்கு வழங்கப்பட்டது.