தேசிய அரசியல் சாசன தினம் துவங்கியது சீசன் பழநி குளங்களில் கமாண்டோ பாதுகாப்பு

பழநி, நவ. 26: சீசன் துவங்கி உள்ள நிலையில் பழநி குளங்களில் குளிக்கும் பக்தர்களை பாதுகாக்க காமாண்டோ வீரர்களை பயன்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பூச திருவிழவிற்கு வரும் அரையாண்டு தேர்வு விடுமுறையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் வருவர். அதுபோல் கார்த்திகை மாத துவக்கத்தில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பழநி கோயிலுக்கு வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் பழநி பகுதியில் உள்ள சண்முகநதி மற்றும் இடும்பன் குளத்தில் குளிப்பது வழக்கம். தொடர் மழையின் காரணமாக இடும்பன் குளம் மற்றும் சண்முகநதியில் நீர் நிரம்பி உள்ளது. குளிக்கும் பக்தர்கள் ஆழமான பகுதிகளுக்கு சென்றுவிடுவதால் வருடந்தோறும் உயிரிழப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது.எனவே, தைப்பூச திருவிழா நேரங்களில் மட்டும் நியமிக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடும்பன் குளம் மற்றும் சண்முகநதி பகுதிகளில் குளிக்கும் பக்தர்களை பாதுகாக்க தீயணைப்பு துறையில் நீச்சலடிப்பதில் நல்ல அனுபவமும், திறமையும் வாய்ந்த கமாண்டோ படையினர் ஈடுபடுத்தப்பட வேண்டுமென்றும், பக்தர்கள் ஆழமான பகுதிகளுக்கு சென்று விடுவதை தடுக்கும் வகையில் தடுப்பு பலகையும், வலையும் பயன்படுத்தப்பட வேண்டுமென்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: