போளூர், நவ.22: போளூர் ஒன்றிய அளவில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குகான விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டிகள் போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. தலைமையாசிரியர் பா.தாமரைச்செல்வி தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் பி.கே.வெங்கடேசன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் ர.ராஜசெல்வகுமார் வரவேற்றார்.மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அ.ராஜ்குமார் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். போட்டி விதிமுறைகள் குறித்து பெண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியர் ர.ராமனுஜம் விளக்கினார்.