ஆர்லிக்ஸ், பூஸ்ட் வாங்கி ₹2 கோடி மோசடி

சேலம், நவ. 22: பிரபல ஆர்லிக்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து, திருச்சியை சேர்ந்த சையத் மீரான் மொய்தீன்(30) என்பவர் ஆர்லிக்ஸ், பூஸ்ட் போன்ற பொருட்களை மொத்தமாக வாங்கி விநியோகம் செய்து வந்தார். திருச்சி மற்றும் சேலத்தில் இவர் ₹2 கோடி அளவுக்கு பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டு தலைமறைவானதாக  கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாகியான ஈஸ்வரன் என்பவர் சேலம் மத்திய குற்றப்பிரிவில் புகார் செய்தார். இதையடுத்து சையத் மீரான் மொய்தீனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: