ராஜபாளையம், நவ.22: ராஜபாளையம் அருகே திறந்து கிடந்த ஆழ்துளை கிணறு தினகரன் செய்தி எதிரொலியாக மூடப்பட்டது.
ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டில் கீரதோட்டம் பகுதியில் பெண்கள் சுகாதார வளாகத்திற்கு பயன்படும் வகையில், பல வருடங்களுக்கு முன் ஆழ் துளை கிணறு அமைக்கப்பட்டது. சில வருடங்களுக்கு முன் ஆழ் துளை கிணற்றில் தண்ணீர் வற்றியது. எனவே இதில் இருந்த மோட்டாரை அகற்றி விட்டு வேறு இடத்தில் புதியதாக போர் அமைக்கப்பட்டு சுகாதார வளாகம் இயங்கி வருகிறது. ஏற்கெனவே இருந்த பழைய ஆழ் துளை கிணற்றை முறையாக மூட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. குழந்தைகள் விழும் அபாயம் நிலவுவதாக தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.