காரைக்குடி, நவ. 22: சமுதாயத்தின் வளர்ச்சிக்கு வரலாறு தேவை என அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுதுறை, சென்னை தொல்லியல் துறையும் இணைந்து உலக பாரம்பரிய வார துவக்கவிழாவை நடத்தியது. வரலாற்றுத்துறை தலைவர் சரவணக்குமார் வரவேற்றார். துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், ‘‘வரலாறு என்பது புத்தகங்களை படித்து மார்க் பெற மட்டுமே என நாம் நினைக்கிறோம். பழங்கதை பேசும் நிகழ்வு என்ற எண்ணம் உள்ளது. அறிவியலின் அடிப்படையில் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் வரலாற்றை விருப்ப பாடமாக படிக்கின்றனர். நாம் பிறப்பதற்கு முன்பு என் நடந்தது என தெரியாவிட்டால் நாம் எப்போதும் குழந்தைகள்