திருவள்ளூர், நவ. 22: திருவள்ளூர் அடுத்த வெள்ளவேடு போலீஸ் நிலையம் அருகே பறிமுதல் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளதால் அதை சுற்றிலும் புதர் ண்டிக்கிடப்பதோடு பாம்புகள் தொல்லை அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் போலீசார் அச்சத்தில் உள்ளனர்.திருவள்ளூர் அடுத்த மேல்மணம்பேடு பகுதியில் உள்ளது வெள்ளவேடு போலீஸ் நிலையம். இதன் அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், மணல் கடத்தல் மற்றும் விபத்து வாகனங்களை பறிமுதல் செய்யும் போலீசார், அதை கொண்டு வந்து போலீஸ் நிலையம் அருகே காலியாக உள்ள பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர்.இந்த வாகனங்கள் பல மாதங்களாக ஒரே இடத்தில் உள்ளதால் அதை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் ஏராளமான பாம்புகள் குடி புகுந்துள்ளன. இந்த பாம்புகள் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவதால் பொதுமக்களும், போலீஸ் நிலையத்துக்குள் புகுவதால் போலீசாரும் அச்சத்தில் உள்ளனர்.