காஸ் கசிந்து தீ விபத்து

திருப்பூர், நவ.22:திருப்பூர், பெருமாநல்லூர் ரோடு, கூத்தம்பாளையம் பிரிவு, கே.பி நகரை சேர்ந்தவர் ரகுநாத். அதே பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான  சில வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீடு ஒன்றில் வடமாநில இளைஞர்கள் சிலர் தங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் பணிமுடிந்து வந்த இளைஞர்கள் உணவு சமைப்பதற்காக காஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளனர். அப்போது காஸ் குழாயில் சமையல் காஸ் கசிவு இருந்ததால்அதில் தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: