விடுதலை சிறுத்தை மகளிரணி புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி,  நவ. 22:  விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை இழிவாக பேசிய  நடிகைகள் காயத்ரி ரகுராம் மற்றும் கஸ்தூரியை கண்டித்து அக்கட்சி சார்பில்  புதுவையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுதேசி மில் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மகளிர் விடுதலை இயக்க மாநில செயலாளர் லட்சுமி தலைமை  தாங்கினார். துணை செயலாளர்கள் கிருஷ்ணகுமாரி, முருகமதி, ஜெயலட்சுமி,  பொருளாளர் பாக்கியலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை செயலாளர்  தேவ.பொழிலன், மாநில செயலாளர்கள் அமுதவன், தமிழ்மாறன் ஆகியோர்  சிறப்புரையாற்றினர். சிறப்பு அழைப்பாளராக இந்திய தேசிய மகளிர் சம்மேளனம்  அமுதா பங்கேற்று கண்டன உரையாற்றினார். இதில் தொகுதி செயலாளர்கள்  பாத்திமா, கற்பகம், அகிலா, பத்மா, அனுசியா உள்பட 50க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டு நடிகைகள் காயத்ரி ரகுராம், கஸ்தூரிக்கு எதிராக  முழக்கமிட்டனர். பின்னர் முக்கிய நிர்வாகிகள் சீனியர் எஸ்பி அலுவலகத்தில்  திருமாவளவனை விமர்சித்த நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார்  மனு அளித்தனர்.

Related Stories: