ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

புதுச்சேரி, நவ. 22: புதுச்சேரி- கடலூர் ரோட்டில் தண்டவாளத்தை கடந்தபோது ரயிலில் அடிபட்டு மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.  புதுவை, கடலூர் ரோட்டில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே சுமார் 70 வயது  மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி ரயிலில் அடிபட்டு உயிருக்கு  போராடினார். தண்டவாளத்தை கடக்க முயன்றபோது நடந்த இந்த விபத்தில் சிக்கிய  அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த  மூதாட்டி நேற்று முன்தினம் இறந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்  என்ற விபரம் தெரியவில்லை. இது தொடர்பாக காராமணிக்குப்பத்தை சேர்ந்த  அந்தோணி குரூஸ் அளித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: