திருச்சுழி, நவ.20: திருச்சுழியில் உள்ள வைத்தியலிங்க நாடார் மேல்நிலை பள்ளியில், இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நேரு யுவகேந்திரா விருதுநகர் மற்றும் மேலேந்தல் நேரு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் திறன்மேம்பாட்டு விளையாட்டு போட்டி நடைபெற்றது. நேருயுவ கேந்திரா மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் ஞானச்சந்திரன் போட்டியை துவக்கி வைத்தார். கபடி, கைப்பந்து, கால்பந்து, குண்டு எறிதல், 400 மீ ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. 50க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.