விருதுநகர், நவ. 20: விருதுநகர் அருகே, மீசலூரைச் சேர்ந்த சத்தியபாமா தனது இரண்டு மகன்களுடன் நேற்று முன்தினம் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: விவசாய குடும்பத்தில் பிறந்த நான் சிறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டேன்; சிரமப்பட்டு பி.காம், பிஜிடிசிஏ, தமிழ், ஆங்கிலத்தில் டைப்பிங் முடித்துள்ளேன். எனது கணவர் கடந்த 2017 விபத்தில் உயிரிழந்தார். 13 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களை அரசு பள்ளியில் படிக்க வைத்துள்ளேன். கணவர் இறந்து 3 வருடங்களாகியும் விதவை பென்ஷன், மாற்றத்திறனாளிக்கான உதவித்தொகை மற்றும் அரசு வேலை எதுவும் கிடைக்கவில்லை.