குன்னூர், நவ.20: நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி தனியாருக்கு கடைகள் அமைக்க அனுமதி வழங்கிய சம்பவம் சர்ச்ைசயை ஏற்படுத்தியுள்ளது. குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில், பால்காரன் லைன், நஞ்சப்பச்சத்திரம், கிளண்டேல், டபுள் ரோடு, ரன்னி மேடு எஸ்டேட், போயர் காலனி ஆகிய பகுதிகளில் 1700 குடும்ப அட்டைதார்கள் பயன்பெற நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் தேவராஜ் தலைமையில் கடந்த 2017ம் ஆண்டில் ரேஷன்கடை கட்டப்பட்டது. பின்பு திறக்கும் தருவாயில் இருந்தபோது ரேஷன் கடை மற்றும் தபால் நிலையம் உட்பட 14 கடைகள் ஆக்கிரமிப்பு எனக்கூறி நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்கத்திற்காக 3 மாதம் அவகாசம் அளித்து ஜேசிபி மூலம் இடித்து அகற்றினர். அப்போது தி.மு.க. உட்பட அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. இருந்த போதும் கடைகள் முழுவதுமாக இடிக்கப்பட்டது.