திருவண்ணாமலை, நவ.20: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீப நிகழ்வுகளை அகன்ற திரைகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா, வரும் 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவின் நிறைவாக, 10ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படும்.மகா தீப தரிசனத்துக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விரிவான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. பரணி தீபம் மற்றும் மகா தீபத்தின் போது, அண்ணாமலையார் கோயிலுக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.எனவே, கோயிலுக்குள் செல்ல முடியாத பக்தர்கள் மற்றும் விழா நடைபெறும் கோயில் பிரகாரத்துக்குள் செல்ல முடியாத பக்தர்கள் விழாவை தரிசிக்க வசதியாக, நேரடி ஒளிபரப்பு செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.