திருச்செங்கோடு, நவ.19: திருச்செங்கோட்டில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான இளவழகன், சார்பு நீதிபதிகள் சுஜாதா, சையத் பர்கத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு, ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழாமல் தடுப்பது எப்படி என்று ஆலோசனை நடத்தினர். ரிக் உரிமையாளர் சங்கங்களின் மாநில சம்மேளன தலைவர் சீனிவாசா கந்தசாமி, செயலர் கொங்கு சேகர், பொருளாளர் சுந்தரராஜன், துணைத்தலைவர் அசோக்குமார், லாரி உரிமைாயாளர்கள் சங்க தலைவர் பாரி கணேசன், சட்ட ஆலோசகர் பரணீதரன் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ரிக் சங்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.