தாராபுரம்.நவ.19: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர திமுக அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு விண்ணப்பம் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி தாராபுரம் திமுக நகர அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய தேசிய லீக் கட்சியின் நிர்வாகி அபூபக்கர் சித்திக் தலைமையில் தாராபுரம் நகராட்சி ஐந்து மற்றும் ஆறாவது வார்டு பகுதிகளைச் சேர்ந்த 50 இளைஞர்கள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.