திருப்பூர்,நவ.19:ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை கண்டித்து திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு பாஜவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரான்ஸ் நாட்டிடமிருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டதில் எவ்வித முறைகேடுகளும் இல்லை என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி விட்டது. எந்தத் தவறும் நடக்கவில்லை எனக் கூறியுள்ளதுடன், ராகுல்காந்தியையும் கண்டித்துள்ளது. இவ்விவகாரத்தில் தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுகளைக் கூறி வரும் காங்கிரசின் செயல்பாடு கண்டனத்திற்குரியது.