பல்வேறு குற்ற வழக்குகளில் திருப்பூரில் 27 பேர் கைது

திருப்பூர்,நவ.19:திருப்பூர் மாநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம், லாட்டரி, புகையிலை விற்பனை மற்றும் பணம் வைத்து சீட்டு விளையாட்டு ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 27 பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் அனுப்பர்பாளையம், வீரபாண்டி போலீசார் சக்திநகர் முதல் வீதி, வீரபாண்டி லட்சுமி நகர் ஆகிய இடங்களில் சோதனை நடத்திய போது பணம் வைத்து சீட்டு விளையாடிய வெற்றிவேல்(29), ஜெயசந்திரன்(42) உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.17,570ஐ பறிமுதல் செய்தனர். சாமுண்டிபுரம் மெயின் ரோடு ஜெயம்பேக்கரி, சேரங்காடு என்.பி. பஸ் ஸ்டாப், ராக்கியாம்பாளையம் பிரிவு கன்னிமரா ஹோட்டல், கோவில் வழி பிள்ளையார் நகர் லட்சுமி ஸ்டோர், நல்லூர் பஸ் ஸ்டாப் ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளில் கனேஷ்குமார்(27), சுரேஷ்(42), அப்துல் நிசார்(32), மனோஜ்ஆனந்த்(22), சித்தார்த்தன்(23) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.  

குளத்துப்பாளையம் பேக்கரி அருகே லாட்டரி விற்பனை செய்த மனோகரன்(41) என்பவரை வீரபாண்டி போலீசார் கைது செய்து 36 லாட்டரி சீட்டுகள், ரூ.400 ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். வஞ்சிபாளையம், காவாலிபாளையம், புதுப்பாளையம், மணியகாரன்பாளையம், கோவை டிபார்ட்மென்ட் ஸ்டோர், திலகர் நகர், ராதா நகர், பூலுவம்பட்டி, அம்மன் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடை அருகே கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த வீரகுமார்(42), ஆனந்தபாபு(25), ராமசந்திரன்(54), தீனா(23) உட்பட 11 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து 165 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: