திருப்பூர்,நவ.19:திருப்பூர் மாநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம், லாட்டரி, புகையிலை விற்பனை மற்றும் பணம் வைத்து சீட்டு விளையாட்டு ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 27 பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் அனுப்பர்பாளையம், வீரபாண்டி போலீசார் சக்திநகர் முதல் வீதி, வீரபாண்டி லட்சுமி நகர் ஆகிய இடங்களில் சோதனை நடத்திய போது பணம் வைத்து சீட்டு விளையாடிய வெற்றிவேல்(29), ஜெயசந்திரன்(42) உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.17,570ஐ பறிமுதல் செய்தனர். சாமுண்டிபுரம் மெயின் ரோடு ஜெயம்பேக்கரி, சேரங்காடு என்.பி. பஸ் ஸ்டாப், ராக்கியாம்பாளையம் பிரிவு கன்னிமரா ஹோட்டல், கோவில் வழி பிள்ளையார் நகர் லட்சுமி ஸ்டோர், நல்லூர் பஸ் ஸ்டாப் ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளில் கனேஷ்குமார்(27), சுரேஷ்(42), அப்துல் நிசார்(32), மனோஜ்ஆனந்த்(22), சித்தார்த்தன்(23) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.