திருப்பூர், நவ 14: பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். திருப்பூர் தெற்கு வட்டம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கரட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பெருந்தொழுவு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள சிற்றூராட்சி உறுப்பினர்கள், சிற்றூராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.