தண்டராம்பட்டு, நவ.13: தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் ஊராட்சியில் உள்ள மகளிர் சுகாதார வளாகத்தில் 6 மாதமாக உடைந்து கிடக்கும் பைப்லைனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் ஊராட்சி அம்பேத்கர் நகரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு சார்பில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு சுகாதார வளாகத்திற்கு செல்லும் பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீரின்றி சுகாதார வளாகம் காட்சி பொருளாக மாறியது.