திருப்பூர், நவ. 13: திருப்பூர், கே.எஸ்.சி. அரசு பள்ளியில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டி நேற்று நடந்தது. திருப்பூர், கே.எஸ்.சி அரசு பள்ளியில் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கல்வி மாவட்ட போட்டியில் திருப்பூரில் 2 மாணவர்கள், பல்லடத்தில் 2, தாராபுரத்தில் 2, உடுமலையில் 2 என மொத்தம் 8 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று மாவட்ட அளவிலான போட்டியில் 8 பேர் கலந்து கொண்டு, சமூக ஊடங்களால் நன்மையா?, தீமையா? என்ற தலைப்பில் பேசினர். இதில், நஞ்சியாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி கெளரி முதலிடமும், இரண்டாமிடம் பல்லடம் அரசு மகளிர் பள்ளி மாணவி ஜனனி, மூன்றாமிடம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி பிரியதர்ஷினி ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.