நாகர்கோவில், நவ.13 : நாடு முழுவதும் சிறுபான்மையினர், பட்டியல் இன மக்கள், மலை வாழ் மக்கள் கும்பல்களால் படுகொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்தும், ராஜஸ்தான், மணிப்பூர், மேற்கு வங்கம் மாநிலங்களில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள கும்பல் படுகொலை தடுப்பு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்க கேட்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு முழுவதும் ைகயெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.