திசையன்விளை, நவ. 13: திசையன்விளையில் இருந்து சாத்தான்குளம் செல்லும் சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திசையன்விளையில் இருந்து சாத்தான்குளம் செல்லும் சாலை, கடந்த 4 ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்தது. இச்சாலை முழுவதும் ஜல்லிகள் விரிக்கப்பட்ட நிலையில் உரிய பயன்பாட்டிற்கு உதவாத நிலையிலேயே உள்ளது. இதனால் இந்த சாலையில் உள்ள இரு கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் முருகேசபுரம், அழகியவிளை வழியாக சுமார் 4 கிமீ தூரம் சுற்றியே செல்கின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சரிசெய்ய வலியுறுத்தி திசையன்விளை பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.