சிவகாசி, நவ. 12: சிவகாசி தாலுகா அலுவலகத்தில், அதிகாரிகளின் அலட்சியத்தால், மின்சாரம் வீணாகும அவலம் ஏற்பட்டுள்ளது. மின் சிக்கனத்தை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. இதில், பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய, அரசு அதிகாரிகளின் அலட்சியமாக செயல்படுகின்றனர். சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் மின்சாரம் வீணாகிறது. வேலை நாட்களாக இருந்த போதிலும் தாலுகா அலுவலகத்தின் உள்ளே துணை வட்டாட்சியர்கள் பகுதி உட்பட 9 பகுதிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியாளர்கள் இல்லாத போதிலும் மின்விளக்குகள் வீணாக எரிகின்றன.