மூணாறு, நவ.12: மூணாறில் மூணாறு-உடுமலை பகுதிகளை இணைக்கும் பெரியவாரை தற்காலிக பாலம் உடைந்ததால் கே.டி.ஹச்.பி நிறுவனத்திற்கு சொந்தமான பாதை நேற்று வாகன போக்குவரத்திற்காக திறந்து கொடுக்கப்பட்டது. மூணாறு-உடுமலை பகுதிகளை இணைக்கும் முக்கிய பாலமான பெரியவாரை பாலம் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழை காரணமாக பாலம் உடைந்தது. பின்னர் போக்குவரத்திற்காக தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலமும் 3 முறை உடைந்ததையடுத்து, இறுதியாக ஜெர்மன் தொழில்நுட்பத்தில் பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்நிலையில் நவ.9ம் தேதி பாலம் மீண்டும் உடைந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள 8 எஸ்டேட் தொழிலாளர்கள் பெரிதும் பதிப்படைந்தனர். இந்நிலையில் கே,டி.ஹச்.பி நிறுவனத்திற்கு சொந்தமான பாதையை தற்காலிகமாக திறந்து கொடுக்க வலியுறுத்தி தேவிகுளம் துணை ஆட்சியர் பிரேம் கிருஷ்ணன் தலைமையில் நிறுவன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது அதன் பலனாக நேற்று காலை முதல்