பெரணமல்லூர், நவ.12: பெரணமல்லூர் ஒன்றியத்தில் நெல் பயிருக்கு காப்பீடு தொகை செலுத்த விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகத்தை வேளாண் உதவி இயக்குனர் தொடங்கி வைத்தார்.பெரணமல்லூர் ஒன்றியத்தில் நெல் பயிருக்கு காப்பீடு தொகை செலுத்தி பயன் அடையுமாறு வேளாண் உதவி இயக்குநர் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து, வேளாண் உதவி இயக்குனர்(பொறுப்பு) சுந்தரம் நெடுங்குணம் பகுதியில் நேற்று நோட்டீஸ் விநியோகம் செய்து கூறியதாவது:
விவசாயிகள் தற்போது இரண்டாம் பருவ சம்பா சாகுபட்டியில் ஈடுபட்டுள்ளனர். இதில் அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால் அதற்காக காப்பீடு திட்டத்தில் சேர வேண்டும். இந்த திட்டத்தின்படி விவசாயிகளுக்கு பயிர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால் உரிய காப்பீடு வழங்கப்படும்.