நாமக்கல், நவ.12: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், நாளை (13ம்தேதி) மாலை 5 மணிக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் உடையவர் தலைமை வகிக்கிறார். இதில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. எனவே, மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அளவிளான சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளரர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.