சேலம், நவ.12: சேலம் மாநகரில் மிலாது நபி நாளில் சந்து கடைகளில் மதுவிற்ற 11 பேரை போலீசார் கைது செய்து, 950 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மிலாது நபியையொட்டி நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஆனால், ஆங்காங்கே சந்து கடைகளில் மது விற்பனை படுஜோராக நடந்தது. சேலம் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில், திருட்டு தனமாக டாஸ்மாக் மதுவகைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தனர். இதுதொடர்பான தகவல்களின் பேரில் மதுவிலக்கு போலீசாரும், அந்தந்த ஸ்டேஷன் போலீசாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், சேலம் டவுன் பகுதியில் எஸ்ஐ மாணிக்கம் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், சுந்தர் (44) என்பவர் 133 மது பாட்டிகளுடனும், மணிகண்டன் (39) என்பவர் 127 மதுபாட்டில்களுடனும், வாலிபர் பார்த்திபன் (21) 112 பாட்டில்களுடனும் ன் சிக்கினர். இந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.