வத்தலக்குண்டு, நவ. 8: வத்தலக்குண்டு அருகே மர்ம காய்ச்சலால் 100க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
வத்தலக்கண்டு ஊராட்சி ஒன்றியம், கோம்பைபட்டி ஊராட்சிக்குட்பட்டது மேலக்கோவில்பட்டி அம்பேத்கர் நகர். இங்கு சுமார் 120 வீடுகள் உள்ளன. 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என 100க்கும் மேற்பட்டோர் மர்மக்காய்ச்சால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இதுதொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் பாக்யராஜ், விஜயகுமார் ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலர் வேதாவிடம் புகார் அளித்தனர்.