உடுமலை,நவ.8: குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ஊரக வளர்ச்சி துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டவரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: சோமவாரப்பட்டி ஊராட்சியில் ஒரு விவசாயியின் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றப்பட்டுள்ளது. இதேபோல, பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றப்படும் என்றார்.