திருச்சுழி, நவ.7: திருச்சுழி அருகே கால்வாய் ஆக்கிரமிப்ைப அதிகாரிகள் அகற்ற கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சுழி அருகே ஆக்கிரமித்துள்ள வரத்து கால்வாயை அகற்ற முற்பட்ட போது இடையங்குளம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு . திருச்சுழி அருகே மைலி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தின் அருகே பாசன வசதி பெறும் வகையில் மைலி மற்றும் நத்தக்குளம் கண்மாய் உள்ளது. பல வருடங்களுக்கு முன்பு திருச்சுழி தாலுகாவிற்குட்பட்ட இலுப்பைக்குளம் கண்மாய் நீர் நிரம்பி மைலி, நத்தக்குளம் கண்மாய்களுக்கு நீர் வந்தடைந்தது. காலப்போக்கில் தடம் மாறி மைலி கண்மாய்க்கு வரக்கூடிய நீர் காரியாபட்டி தாலுகாவிற்குட்பட்ட இடையங்குளம் கண்மாய்க்கு சென்றது. அக்கண்மாய் நிரம்பிய பின்பு சாலையோர கால்வாய் வழியாக மைலி கண்மாய்க்கு நீரை கொண்டு விவசாயம் செய்து வந்தனர். தற்போது அக்கண்மாய் நீரை அவ்வழியாக கொண்டு செல்ல இடையங்குளத்தை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மைலி கிராமத்தினர் தங்களது வரைபடத்தில் உள்ள கால்வாய் இடையங்குளத்தை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதனை மீட்டு தரும்படியும் காரியபட்டி தாசில்தாரிடம் புகார் அளித்தனர்.