அருப்புக்கோட்டை, நவ.7: திருப்புவனத்தில் இருந்து அருப்புக்கோட்டைக்கு குடிநீர் கொண்டு வருவதற்கு பகிர்மான குழாய் பதிக்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது. இதனை சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.
அருப்புக்கோட்டை நகருக்கு திருப்புவனம் வைகை ஆற்றில் இருந்து குடிநீர் பம்பிங் செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. மழையின்மை காரணமாக வைகை ஆறு வறண்டதால் வைகையின் மூலம் குடிநீர் விநியோகம் செய்வது தடைப்பட்டது. தற்போது மழை பெய்ததால் வைகையில் தண்ணீர் ஓடுகிறது. அருப்புக்கோட்டைக்கு குடிநீர் பம்பிங் செய்யப்படும் திருப்புவனம் நீரேற்றும் நிலையம் வரை தண்ணீர் செல்கிறது. இதனால் குடிநீர் பம்பிங் செய்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்திற்காக பதிக்கப்பட்ட குழாய்கள் 40 ஆண்டு காலம் ஆகிவிட்டது. தற்போது 36 கி.மீ தொலைவிற்கு 26 கோடி ரூபாய் செலவில் புதிய குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. கட்டங்குடியிலிருந்து 29 கி.மீ தொலைவிற்கு குழாய் பதிக்கும் பணி முடிவடைந்து விட்டது. திருப்புவனத்திலிருந்து 7 கி.மீ தொலைவிற்கு குழாய் பதிக்கும் பணி நடைபெறவில்லை.