மதுரை, விருதுநகருக்கு அனுப்பப்படும் நோயாளிகள் ஏமாற்றிய பருவமழை விவசாயிகள் வேதனை

ராஜபாளையம், நவ.7:  தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அணைகள் நிரம்பியுள்ளன. நீர் வரத்து வந்தவண்ணம் உள்ளது. ஆனால் ராஜபாளையம் மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தினால் அதை நம்பியுள்ள கண்மாய்கள் மற்றும்  குளங்கள் போதிய தண்ணீர் வராமல் வற்றி கிடக்கின்றன. இதனால் விவசாயிகள்  விவசாய பணிகளை தொடங்க முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை இல்லாத நிலையில் நிலத்தடி நீரும் வற்றிவிட்டது. இந்நிலையில் மழைநீரும் கிடைக்காததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். 

Related Stories: