ஓமலூர், நவ.7:பெங்களூருவில் இருந்து திண்டுக்கல்லுக்கு காய்கறி லாரியில் கடத்தி வந்த ₹25 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து காய்கறி லாரி மூலம் சேலம் வழியே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக ஓமலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த் தலைமையிலான போலீசார் நேற்று இரவு காமலாபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காய்கறி லாரியை மடக்கி சோதனை நடத்தியதில், காய்கறி மூட்டைகளுக்கு அடியில் பெட்டியிலும், மூட்டையிலும் புகையிலை பொருட்கள் பதுக்கி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரியை போலீசார் பறிமுதல் செய்து, லாரி டிரைவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் ேமச்சேரியை சேர்ந்த சண்முகம், மணிகண்டன் என்பதும், பெங்களூருவில் இருந்து சேலம் வழியே திண்டுக்கல், கரூர், நாமக்கல்லுக்கு சப்ளை செய்ததும் தெரிந்தது.